பொலிஸ் மா அதிபர் தொடர்பிலான செய்திக்கு அமைச்சு மட்டத்தில் விசாரணை..

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ பிரதமரோ பணிப்புரை வழங்கவில்லை என்று சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று(20) பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார இதன்போது தெரிவித்திருந்தார்.