பொலன்னறுவை பிரதேசத்தில் பல பகுதிகளில் நாளை(21) 13 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்த பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பெந்தவெவ மற்றும் சேவாகம ஆகிய பிரதேசங்களில் தண்ணீர் விநியோகிக்கப்படும் எல்லா பகுதிகளிலும் இவ்வாறு நாளை(21) காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.