களனி பாலத்தின் திருத்த பணிகள் காரணமாக கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பகுதியானது இன்று(20) முதல் எதிர்வரும் 4ம் திகதி வரை போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, கட்டுநாயக்க நோக்கிய திசையில் சுமார் 200 மீட்டர் வரை நீளத்திற்கு பாதையில் போக்குவரத்து தடைப்பட உள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.