பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் அரசியல் முக்கியஸ்தர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடல்!

பலஸ்தீன் நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை வந்துள்ள பலஸ்தீன் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் சுஹைர் முஹம்மட் ஹம்தல்லா அவர்களினால் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்மட்டக் கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகெண்டார்.

இச்சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பைஸர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குனவர்தன, எம்.ஏ.சுமந்திரன், மற்றும் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிரும் கலந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

Image may contain: 3 people, table and indoor

Image may contain: 4 people, people sitting, table and indoor

Image may contain: 18 people, people smiling, people standing

Image may contain: 2 people