அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியலில் …

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேரையும் எதிர்வரும் 05ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதிவான் நீதிமன்றம் இன்று(21) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று(21) குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சந்தேக நபர்கள் குறித்த மேலதிக தகவல்கள் கொண்ட அறிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.