ஆசியக் கிண்ண தொடரில் இலங்கை அணியானது முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டமை தொடர்பிலான பொறுப்பு இலங்கை தேசிய அணியின் தேர்வுக் குழுவினையே சாரும் என்றும் தேர்வுக் குழுவினை கலைத்து புதிய தேர்வுக் குழுவொன்றினை அமைக்க அமைச்சர் பைசர் முஸ்தபா நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, புதிய தேர்வுக் குழுவிற்கு முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் பந்துல வர்ணபுர மற்றும் ரொஷான் மகாநாம ஆகியோரது பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.