மஹாநாம மற்றும் திஸாநாயக்க ஆகியோருக்கு பிணை…

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(25) பிணையில் விடுவித்துள்ளது.

குறித்த இருவரும் 540 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கோரியிருந்த நிலையில், பின்னர் 100 மில்லியனாக குறைக்கப்பட்டு, 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் திஸாநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.