நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பிற்பகலில் அல்லது மாலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா, சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.