இராணுவ சிப்பாய் கொலை தொடர்பில் இரண்டு சிப்பாய்கள் கைது…

அம்பேபுஸ்ஸ இராணுவ சிப்பாய் கொலை சம்பவம் தொடர்பில் , குறித்த முகாமை சேர்ந்த சந்தேகநபர்களாக இரண்டு சிப்பாய்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த தினம், அம்பேபுஸ்ஸ இராணுவ காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், இராணுவ சிப்பாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டு, அவரின் துப்பாக்கி களவாடிச் செல்லப்பட்டிருந்தது.