சட்டவிரோதமாக 10 தங்க மோதிரங்களை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டிகாவத்த பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 18 இலட்சம் பெறுமதியான 299.80 கிராம் நிறையுடைய 10 மோதிரங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்