DIG நாலக டி சில்வாவின் குரல் மாதிரியை பெற்றுக் கொள்ள நீதிமன்றம் உத்தரவு…

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் குரல் மாதிரியை அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பதிவு செய்து கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக நீதிமன்ற உத்தரவுப்படி ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமாரவின் குரல் மாதிரி இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பதிவு செய்து கொள்ளப்பட்டது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா உடனான தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவுகள் சில, ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவினால் அண்மையில் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.