சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் தின வைபவம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“தன் முனைப்பாற்றலுடன் முன்னோக்கி செல்லுங்கள் – சிறுவர் பருவத்திற்கு ஊக்கமளியுங்கள்” என்ற தொனிப்பொருளில் கீழ் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
மகளீர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சர் சந்திராணி பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய இந்த அமைச்சினால் இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இந்த வைபவத்தில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முத்திரையும் கடித்த உறையும் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.