பாரியளவிலான பண மோசடி மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் மூவரடங்கிய இரண்டாவது சிறப்பு மேல்நீதிமன்றிற்கு நீதிபதிகள் குழுவானது எதிர்வரும் 15ம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் நீதியரசரால் பெயரிடப்பட்டுள்ளது.
அதன் தலைமை நீதிபதியாக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க பெயரிடப்பட்டுள்ளதோடு, குழுவின் ஏனைய உறுப்பினர்களாக மீகமுவ மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா மற்றும் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷஷி மகேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விசேட மேல்நீதிமன்றங்கள் 03 இனை நிறுவுவதற்கு பாராளுமன்ற அனுமதி கிடைக்கப்பட்டுள்ளதோடு, அதன் கீழ் முதலாவது மேல்நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.