கட்டுநாயக்க அதிவேக வீதியின் உட்பிரவேசிக்கும் பகுதி மூடப்படுகிறது..

களனி பாலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிர்மாணப்பணிகள் காரணமாக, பேலியகொட சுற்றுவட்டத்திற்கு அண்மையில் காணப்படும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் உட்பிரவேசிக்கும் பகுதி மூடப்படவுள்ளது.

இன்று(04) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் உட்பிரவேசிக்கும் பகுதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் குறித்த காலப்பகுதியில் மாற்றுவீதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.