பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் திட்டமிட்ட குற்ற செயல்களை தடுக்கும் பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதில் பண்டா என அழைக்கப்படும் அசித்த காயமடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
அதுருகிரிய ஒருவல பகுதியில் இடம்பெற்ற குறித்த பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் மாகந்துரே மதுஷ் மற்றும் அங்கொடை லொக்காவின் உதவியாளர் என சந்தேகிக்கப்படும் பண்டா என அழைக்கப்படும் அசித்தவே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.