புதிய பௌத்த விவகார ஆணையாளர் நாயகமாக சுனந்த காரியப்பெரும நியமனம்….

புதிய பௌத்த விவகார ஆணையாளர் நாயகமாக ஜனாதிபதி செயலக அலுவலகத்தின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய சுனந்த காரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று(04) குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு அதிக காலமாக வெற்றிடமாக இருந்த பெளத்த விவகார ஆணையாளர் பதவிக்கு பதில் ஆணையாளராக அறநெறி பாடசாலை ஆணையாளர் எச்.எச்.குமாரி பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.