கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இடையே விசேட கலந்துரையாடல்…

அனைத்து அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(11) தேர்தல் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

அதன்போது, மாகாண சபை தேர்தல் தொடர்பிலான ஆணைக்குழுவின் நிலைப்பாட்டினை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறியப்படுத்தப்பட உள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.