நீதிமன்ற அவமதிப்பு – இலங்கை வைத்திய சபைக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவு…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்யுமாறு வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமையின் காரணமான நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் நவம்பர் 10ம் திகதி விளக்கமளிக்குமாறு இலங்கை வைத்திய சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று(11) குறித்த வழக்கு விசாரணையின் தவணையின் போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.