வவுனியா – ஹொரவபத்தான வீதியின் மடுகந்த பகுதியில் நேற்று(11) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது.