தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று(12) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று(12) இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டை எட்ட முடியாவிட்டால், சம்பள பிரச்சினையை தொழில் திணைக்களத்தினதும், அரசாங்கத்தினதும் கவனத்திற்கு கொண்டு வரப்போவதாக திரு.ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 500 ரூபாவிலிருந்து 575 ரூபா வரை அதிகரிக்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கியதுடன், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என திரு.ராமநாதன் கூறியுள்ளார்.