இன்று(15) முதல் சிறைச்சாலைகளுக்கு STF…

சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக இன்று(15) முதல் பொலிஸ் அதிரடிப் படையணியின் அதிகாரிகளை ஈடுபடுத்த உள்ளதாக, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பந்து ஜயசிங்க தெரிவித்திருந்தார்.

அதன்படி, அதன் முதல் கட்ட நடவடிக்கையின் கீழ் பொலிஸ் அதிரடிப் படையணியின் 300 அதிகாரிகளை 03 சிறைச்சாலைகளுக்கு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார்.

வெலிக்கட மற்றும் மெகசின் சிறைச்சாலைகளுக்காக பணியாளர்கள் 200 பேரும், அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு 100 பணியாளர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளுக்குள் நடக்கும் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் ஏனைய சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஏற்பவே இவ்வாறு விசேட அதிரடிப் படையை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.