பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா நாளை(18) குற்றத் தடுப்பு விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு, பொலிசாரின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தில் நேற்று(16) முன்னிலையாகுமாறு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமது குழந்தையின் திடீர் சுகவீனம் காரணமாக அங்கு முன்னிலையாக முடியாது என அவர் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகின்றமை தொடர்பில், வாக்குமூலம் ஒன்றை வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகவுள்ளார்