பிரதமர் ரணில் இன்று இந்தியா விஜயம்…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(18) இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இலங்கை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இடம்பெறுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன், இலங்கை மற்றும் இந்திய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்தியா செல்லும் பிரதமர் ரணில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனும், அந்த நாட்டின் வர்த்தக மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன