சரத் பொன்சேகா ஐ.தே.கட்சியின் செயற்குழுவிற்கு…

அமைச்சர் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இணைக்கப்பட்டுள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(17) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்ததாக குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனநாயகக் கட்சியின் தலைவராக பணியாற்றியதற்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.