பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு…

எம்பிலிபிட்டி – இரத்தினபுரி வீதியில் நேற்று(19) பாரவூர்தியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் எம்பிலிபிட்டி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களே உயிரிழந்த நிலையில், பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.