பாகிஸ்தானில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.3 புள்ளிகளாக பதிவானது. தஜிகிஸ்தான்-ஸின்ஜியான் எல்லைப்பகுதியில், 120 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இஸ்லாமாபாத், பெஷாவர், சுவாட், புனிர், சாங்கலா, மலாகண்ட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.