2018 காலி கலந்துரையாடல்’ சர்வதேச சமுத்திர மாநாடு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்றும்(22) நாளையும்(23) இடம்பெறவுள்ளது.
பிரதம அதிதியாகப் பங்கேற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்ப உரையை நிகழ்த்த உள்ளார். 50 நாடுகள் மற்றும் 17 சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சமுத்திரப் பாதுகாப்புத் துறைசார் நிபுணர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும், இலங்கை கடற்படையும் இணைந்து இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன.
‘ஒத்துழைப்பின் மூலம் சமுத்திர முகாமைத்துவத்திற்காக ஒன்றிணைதல்’ என்பது இம்முறை மாநாட்டின் தொனிப்பொருளாகும் என தெரிவிக்கப்படுகிறது.