சீரற்ற காலநிலையினால் மட்டக்களப்பு ரயில்வே திருத்தப் பணிகளில் தாமதம்..

நிலவுகின்ற சீரற்ற காலநிலை திருத்தப் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், மட்டக்களப்பு மார்க்கத்திலான புகையிரத சேவை வழமைக்கு திரும்ப மேலும் சில நாட்கள் செல்லும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த மீனகயா புகையிரதம் மொரகொல்லவெவ மற்றும் கோன்வெவ புகையிரத நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று(22) அதிகாலை 03 மணியளவில் தடம் புரண்டது.

இந்நிலையில் கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கு புகையிரதங்கள் மஹவ புகையிரத நிலையம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.