கண்டி – நுவரெலிய வீதியில் பயணிக்கும் தனியார் பேரூந்து பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில்…

கண்டி – நுவரெலிய வீதியில் பயணிக்கும் வீதி இலக்கம் 47 இற்கான தனியார் பேரூந்து பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வீதியில் மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் மேலதிக பேரூந்தொன்றை பயன்படுத்துவதற்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூந்து பணியாளர்கள் இன்றைய தினம் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையிடம் மனுவொன்றையும் கையளிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.