கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் இன்று(26) அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.