சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேர் பிணையில் செல்ல கொழும்பு விஷேட மேல் நீதிமன்றம் இன்று(26) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுமதிப் பத்திரம் இன்றி யானைகளை வேட்டையாடி தந்தங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அலி ரொஷான் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.