அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறை உடன் அமுலுக்குவரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மறு அறிவித்தல் வரை அனைத்து தரத்திலும் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.