இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22ஆவது பிரதமராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 26ஆம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.