மக்கள் விடுதலை முன்னணியானது, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கோ பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்காது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இன்றைய(02) கட்சித் தலைவர்கள் சந்திப்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வளனகுவதாக தீர்மானித்துள்ளதாக பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டுமாறு தமது கட்சி மற்றும் ஏனைய கட்சிகளதும் கோரிக்கையாக உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.