முன்னர் இருந்த நிலையினை ஏற்க வேண்டியுள்ளதாக சபாநாயகர் அறிக்கை மூலம் தெரிவிப்பு..

புதிய அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் முன்னர் இருந்த நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று(05) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வாய்மொழி மூலமாக தந்த வாக்குறுதியின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால் நவம்பர் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டி நாட்டை ஸ்தீரமடையச் செய்வது சபாநாயகர் என்ற அடிப்படையில் தனது கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக தனக்கு ஒத்துழைப்பு வழங்குவது ஜனாதிபதி ஒருவரின் கட​மை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.