மனுஷ நாணயக்கார ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளார்…

தொழிற்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தனது அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.

ஜனநாயகத்தினை கருத்திற் கொண்டு எதிர்வரும் காலங்களில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டு பயணிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.