ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற் குழுவானது ஜனாதிபதி தலைமையில் நாளை(08) காலை பத்தரமுல்லை ‘அபேகம’ வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக குறித்த கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.