தற்போதைய அரசியல் நிலையில் தனக்கு பாராளுமன்றத்தில் பெருன்பான்மையினை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பயணிக்க தான் தயார் என இந்தியாவின் ‘த ஹிந்து’ செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியில் முன்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“எனக்கு அவருடன்(ஜனாதிபதி) பயணிப்பதில் ஆட்சேபனைகள் இல்லை. இந்தக் கேள்வியினை அவரிடமே(ஜனாதிபதி) நீங்கள் கேட்க வேண்டும். அரசியலமைப்பில் ஒரு கட்சி சார்பில் செயல்பட அனுமதி இல்லை..”
“ அவர்கள் பாராளுமன்றத்தினை கூட்டாமைக்கு காரணம் அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பதேயாகும்.. தாமதம் குறித்து கவலையடைகிறேன் ஏனெனில் நாடு இரண்டுபடுகின்றது… ”