ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு மேலாக 15 பேர் அடங்கிய புதிய அரசியல் சபை ஒன்றினை நியமிக்க குறித்த கட்சியின் அனுமதி நேற்று(08) கிடைத்துள்ளது.
பத்தரமுல்லை – ‘அபே கம’ வளாகத்தில் குறித்த கட்சியின் அகில இலங்கை செயற் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று(08) கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அகில இலங்கை செயற்குழுவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.