முரளி ஒரு சமூக உணர்வற்ற முட்டாள் – மனோ, முரளியின் சமகால அரசியல் கருத்துக்கு ஆவேசம்…

இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கடந்த 07ம் திகதி சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனநாயகத்தை விட நாட்டு மக்களுக்கு மூன்று வேளை சாப்பாடுதான் முக்கியம் என தெரிவித்திருந்தார்.

குறித்த இந்த கருத்து பல ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல விமர்சனங்களை தனதாக்கியிருந்த வேளை, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேஷன் தனது டுவிட்டர் தளத்தில் இது குறித்து பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.

“..மூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.