இலங்கையர்கள் 13 பேர் இஸ்ரேலில் கைது…

சட்டவிரோதமாக இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து தமக்கு உயிராபத்து இருப்பதாக கூறி, குறித்த இந்த 13 பேர் சுற்றுலா வீசா அனுமதியுடன் இஸ்ரேல் சென்றுள்ளனர்.

இதில், இஸ்ரேலின் பென் கூரியன் விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக ஜெருசலம் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.