ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவினைப் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் சற்றுமுன்னர் தீப்பளித்துள்ளது.
கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமையை எதிர்த்து உயர் நீதிமன்றில் மொத்தமாக 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த மனுக்களுக்கான விசாரணைகள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில், பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜெயவர்தன ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய மூவர் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.