கெஸ்பேவ வாவிக்கு அருகில் இருந்து கைக்குண்டொன்று பொலிசாரால் நேற்றிரவு(13) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த குண்டு செயலிழக்கச் செய்யப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.