பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் தற்போது அமைதியின்மை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. .
பாராளுமன்றம் இன்று(14) காலை 10மணிக்கு கூடிய நிலையில் , பின்னர் சபாநாயகரால் நாளை(15) காலை 10 மணி வரையில் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் , பாராளுமன்ற வளாகத்தில் கட்சி ஆதரவாளர்கள் கூடியுள்ளதால் அங்கு தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதியில் பாதுகாப்பிற்காக காவற்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.