பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சரவைக்கும் எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மையினை நிரூபித்து விட்டதாக தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதம் ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் அமைப்புக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க குறித்த கடிதம் சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
