ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் 03 பேர் கைது…

சுமார் 2.4 கிலோகிராம் தங்கத்துடன் மூன்று இலங்கையர்கள் விமான நிலைய சுங்கப்பிரிவினரால் இன்று(16) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் மும்பாயில் இருந்து வந்துள்ளதுடன், ஒரு கோடியே 43 இலட்சத்து 98 ஆயிரத்து 860 ரூபாய் பெறுமதியான 48 தங்கப்பாளங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் கண்டி பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் என சுங்கம் குறிப்பிட்டுள்ளது.