பேரூந்து கட்டணக் குறைப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இன்றைய தினம்(16) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இரண்டு பேரூந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து இலங்கை பேரூந்து சங்கம் ஆகியவை குறித்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளன.
நேற்று(15) நள்ளிரவு முதல் டீசல் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேரூந்து கட்டண முறையிலும் குறைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பேரூந்து கட்டண குறைவு தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் குறித்த சங்கங்கள் மேலும் தெரிவித்துள்ளன.