ராகம மற்றும் ஜா எல இடையிலான புகையிரத போக்குவரத்து மட்டு…

ராகம மற்றும் ஜா எல பகுதிகளுக்கு இடையிலான புகையிரத மார்க்கத்தின் இரு மருங்கலும் முன்னெடுக்கப்படவுள்ள நீர்குழாய் திருத்த பணிகள் காரணமாக புத்தளம் மார்க்கத்தின் ராகம மற்றும் ஜா எல பகுதிகளுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து, இன்று(17) இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 12 வரை இடம்பெறமாட்டாது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் ஜா எல மற்றும் புத்தளத்திற்கு இடையிலான புகையிரத போக்குவரத்து மாத்திரமே இடம்பெறும் எனவும் புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.