பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவந்து அதனை சட்ட ரீதியில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமாயின் பாராளுமன்றத்தினால் கடைபிடிக்கப்படும் விதி முறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரதமர் அலுவகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் செயலாளர் எஸ்.அமரசேகரவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அதற்கான விதி முறைகளும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.