மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் ஆறாவது மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை மகளிர் அணி வெளியேறியுள்ளது.
நேற்று (16) கிரோஸ் இஸ்லேட் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் தோல்வியடைந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.